close
Choose your channels

'அண்ணாத்த' படப்பிடிப்பின்போது ரஜினியுடன் செல்பி எடுத்த நண்பரின் மகள்!

Thursday, May 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் மகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

கடந்த சில நாட்களாக ’அண்ணாத்த’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் ரஜினியை யாரும் பக்கத்தில் நெருங்க விடாமல் படக்குழுவினர் மிகவும் கவனத்துடன் அவரை பாதுகாத்துக் கொண்டனர். இந்த நிலையில் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மோகன்பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு மட்டும் ரஜினியை ’அண்ணாத்த’ படப்பிடிப்பின்போது சந்தித்து அவருடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

ரஜினியை படக்குழுவினர் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்தாலும் நெருங்கிய நண்பரின் மகள் என்பதால் மட்டும் லட்சுமி மஞ்சுவை மட்டும் அவர்கள் அனுமதித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.