என்னுடைய சூப்பர் ஹீரோ உங்கள் தந்தை தான்: நடிகைக்கு நன்றி கூறிய சூர்யா!

  • IndiaGlitz, [Friday,November 13 2020]

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு அனைத்து மாநிலங்களிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஒன்று நடித்திருந்த மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது டுவிட்டர் பக்கத்தில் ’சூரரைப்போற்று’ படத்திற்கு தனது வாழ்த்தினை கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த பிறகு சூர்யாவின் மீதான அன்பு மற்றும் மரியாதை எனக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது என்றும், நீங்கள் உங்களுடைய திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார் இந்த படத்தை பார்த்த பின்னர் சுதா கொங்கரா மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் என் தந்தை இந்த படத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார் என்றும் உங்கள் இருவரையும் ஒரே படத்தில் பார்த்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லட்சுமி மஞ்சுவின் இந்தக் டுவீட்டிற்கு பதிலளித்த சூர்யா ’சூரரை போற்று’ படப்பிடிப்பின்போது உங்கள் தந்தையுடன் நடித்தது ஒரு சூப்பர் ஹீரோவுடன் நடித்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது என்றும், தெலுங்கு திரையுலக ரசிகர்களிடம் இருந்து கிடைத்துள்ள மிகப் பெரிய அன்பு என்னை நெகிழ வைத்து உள்ளது என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

More News

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இன்னொரு படமும் ரெடி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பதும், அதில் ஒரு சில படங்களின் ஒட்டுமொத்த பணிகளும் முடிவுக்கு

ஜீஸஸ் என் ஃப்ரெண்டு தான், எண்ணெயில போட்டு பொரிச்சிடுவேன்: மூக்குத்தி அம்மன் ஸ்னீக்பீக்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நாளை தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

காலையில் சிம்பு, மாலையில் ஜெய்: சுசீந்திரனின் தீபாவளி திட்டம்!

மிக குறுகிய காலத்தில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன் என்பதும் குறிப்பாக அவர் சிம்புவை வைத்தே 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தை 40 நாட்களில் முடித்து சாதனை செய்தவர்

சூர்யா அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது: வைகைப்புயல் வடிவேலு!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் தீபாவளி விருந்தாக சூர்யா ரசிகர்களுக்கு நேற்று ரிலீசான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் ஆகியோர்

5 கோடி ஜீவனாம்சம் தராத கணவரின் குடும்பத்தை கொலை செய்த மனைவி: சென்னையில் பரபரப்பு

கணவரிடமிருந்து விவாகரத்து மற்றும் 5 கோடி ஜீவனாம்சம் கேட்டு, கணவர் வீட்டினர் தராததால் தனது சகோதரரின் உதவியால் கணவரின் குடும்பத்தில் மூன்று பேரை சுட்டுக் கொலை செய்த மனைவி