ஆறு வருடம் கழித்து மூடர் கூடம் நவீனின் திருமண டுவீட் ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

'மூடர் கூடம்' என்ற ஒரே ஒரு படத்தால் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நவீன், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த படத்தில் முஸ்லீம் பெண் கேரக்டரில் நடித்திருந்த சிந்து என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2013ஆம் ஆண்டு 'மூடர் கூடம்' படம் வெளிவரும் முன்னரே இவர்களது திருமணம் நடந்ததாக அப்போதே செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது பதிவுத்திருமணம் மற்றும் மத நம்பிக்கை குறித்து இயக்குனர் நவீன் தற்போது ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள் #மனிதசமத்துவம்' என்று பதிவு செய்துள்ளார்.

திருமணம் நடைபெற்று ஆறு வருடங்கள் கழித்து, அதுவும் தேர்தலுக்கு முந்தைய நாள் திடீரென இயக்குனர் நவீன் தனது திருமணத்தையும் மதத்தையும் இணைத்து ஒரு டுவீட்டை ஏன் பதிவு செய்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இயக்குனர் நவீன் தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர், விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் நாயகியாக 'அர்ஜூன்ரெட்டி' ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

More News

3D கண்ணாடி ஆர்டர் பண்ணிட்டேன்: விஜய்சங்கரை கிண்டல் செய்தாரா அம்பத்தி ராயுடு?

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விராத் கோஹ்லி, தோனி, ரோஹித்சர்மா ஆகியோர்களுக்கு அடுத்தபடியாக அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள அம்பத்தி ராயுடு

பாறை இடுக்கில் கிடந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம்! நடந்தது என்ன? பதற வைக்கும் சம்பவம்!

வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா வந்த இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில்

எதையும் சந்திக்க தயார்! ஐடி ரெய்டுக்கு பின் கனிமொழி பேட்டி!

தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கியில் இன்று கடன் வாங்கினால் நாளை தள்ளுபடி: உதயநிதி ஸ்டாலின்

கூட்டுறவு வங்கியில் இன்றே அனைவரும் கடன் வாங்குங்கள். நாளை தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கடன் தள்ளுபடி செய்யப்படும்

டிக்டாக் வீடியோ பார்த்த வாலிபர் பரிதாப பலி! நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள புதியதாக ஒரு கட்டிடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.