'தளபதி 61' டைட்டில்: ஆறில் ஒன்றுதான் 'மூன்றுமுகம்'. படக்குழுவினர் விளக்கம்.

  • IndiaGlitz, [Sunday,April 02 2017]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' என கடந்த சில மணி நேரங்களாக சமூக இணையதளங்களில் ஒரு போஸ்டர் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே 'தளபதி 61' படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் 'தளபதி 61' படக்குழுவினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் முழுக்க முழுக்க ரசிகர் ஒருவரால் டிசைன் செய்யப்பட்டதாகவும், இந்த போஸ்டரின் படி கூறப்படும் 'மூன்று முகம்' டைட்டில் நாங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் ஆறு டைட்டில்களில் ஒன்றுதான் என்றும், இன்னும் இந்த படத்தின் டைட்டில் இறுதி செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் 'தளபதி 61' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, நித்யாமேனன் ஆகியோர் கடந்த 80கள் மாடலில் உடையணிந்த ஸ்டில் ஒன்று கசிந்ததால் படக்குழுவினர் வருத்தத்தில் இருக்கும் நிலையில் தற்போது ரசிகர் ஒருவரின் டைட்டில் டிசைன் வெளிவந்து குழப்பத்தை ஏற்படுத்தியதால் படக்குழுவினர் அதிருப்தியில் உள்ளனர்

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவருகிறது. இந்த படத்திற்கான பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியை இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

More News

மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் பட டைட்டில்?

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும்  படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட

கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு சத்யராஜ் செய்த மகத்தான உதவி

சமீபத்தில் கோவை பகுதியில் பரூக் என்ற கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். திராவிட கழகத்தை சேர்ந்த பரூக், இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்து பரூக்கை கொலை செய்ததாக அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்...

காதல் மன்னன் கேரக்டரை மிஸ் செய்த சூர்யா

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கேரக்டரில் பிரபல நடிகர் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். வெற்றி பெறுவது யார்?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியுள்ளது.

ஏப்ரல்-1: இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள்

ஏப்ரல்-1. இந்த தேதியை கேட்டால் அனைவருக்கும் முட்டாள்கள் தினம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் 1, மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது