close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சில பிரபலங்கள்: ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ்

Monday, July 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 14 பங்கேற்பாளர்கள் என அறிவிக்கப்பட்டனர். பின்னர் 15 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி, நமிதா என ஆறு பேர் வெளியேறியுள்ளதால் தற்போது 9 மட்டுமே உள்ளனர். ஆனால் நேற்று திடீரென நடிகை பிந்துமாதவி புதிய பங்கேற்பாளராக கலந்து கொண்டதால் தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 பேர் உள்ளனர்.
இந்த பத்து பேரில் ஒருவர்தான் பிக்பாஸ் வின்னர் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு மேலும் சஸ்பென்ஸ் கொடுக்கும் வகையில் ,'இன்னும் சில பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக தொலைக்காட்சி தரப்பினர் தெரிவித்துள்ளனர்
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதேபோல் பிரபலங்கள் இடையில் எண்ட்ரி கொடுத்ததுண்டு என்றும் அதேபோல் தமிழிலும் பிரபலங்கள் இணைவது ஆரம்பத்திலேயே திட்டமிட்ட ஒன்றுதான் என்றும் ரகசியம் கருதி அதை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்ததாகவும் அந்த டிவி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் புதியதாக உள்ளே நுழைபவர்களுக்கு தங்கள் போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரியும் என்பதால் அவர்கள் வெற்றியடைய வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின்னர் அவருக்கு எந்தமாதிரியான வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்துள்ளது என்பது தெரியாததால் இனிவரும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.