close
Choose your channels

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு 

Monday, May 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 700க்கும் அதிகமாகவும், சென்னையில் 500க்கும் அதிகமாகவும் இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பில் தமிழகம் புதிய உச்சத்தை அடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 805ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது இன்றுதான். மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்தவர்கள் எண்ணிக்கை 93 என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 805 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 549பேர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,125ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 407 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும். இதனையடுத்து கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,731ஆக உயர்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.