close
Choose your channels

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு!

Sunday, May 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 37,776 என இருந்த நிலையில் சற்றுமுன் மத்திய அரசு அறிவித்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,980 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 2204 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,223 லிருந்து 1,301 ஆக அதிகரித்துள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,018 லிருந்து 10,633 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் உலக அளவில் 34,83,891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244,772ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்த அமெரிக்காவில் மட்டும் இதுவரை கொரோனாவால் 11,60,774 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 2,45,567 பேர்களும், இத்தாலியில் 2,09,328 பேர்களும், இங்கிலாந்தில் 1,82,260 பேர்களும், பிரான்ஸில் 1,68,396 பேர்களும், ஜெர்மனியில் 1,64,967 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.