ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து மூவாயிரமாக மட்டுமே இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் சற்றுமுன் தெரிவித்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,06,750ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இந்தியாவில் கொரோனாவால் 1,01,139 பேர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும். மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163லிருந்து 3,303ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 49,85,658 என்பதும், 324,889 பேர்கள் உலக அளவில் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,70,583 என்பதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,533 என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவில் 299,941 பேர்களும், ஸ்பெயினில் 278,803 பேர்களும், பிரேசிலில் 271,885 பேர்களும், இங்கிலாந்தில் 248,818 பேர்களும், இத்தாலியில் 226,699 பேர்களும், பிரான்ஸில் 180,809 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

12 ஆயிரத்தை தாண்டிய தமிழக கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் மாலையில் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை

மகனுக்கு முடிதிருத்தம் செய்த சச்சின் தெண்டுல்கர்: வைரலாகும் வீடியோ

இந்த கொரோனா விடுமுறை பலருக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என்பதும் இதுவரை செய்யாத வேலைகளைக்கூட பலரை செய்ய வைத்துள்ளது என்பது தற்போது வெளிவந்து கொண்டிருக்கும்

2013ஆம் ஆண்டிலேயே இந்திய மொழியை சரளமாக பேசிய 'மணி ஹெய்ஸ்ட்' நடிகை

ஓடிடி பிளாட்பாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் மணி ஹெய்ஸ்ட்' சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது.

அடிமடியில் கை வைக்க வேண்டாம்: அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9 இளம்பெண்களை 60 நாட்களாக பூட்டி வைத்த ஹவுஸ் ஓனர்: அதிர்ச்சி தகவல்

நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த 9 இளம் பெண்கள் பஞ்சாப் மாநிலத்தில் தங்கியிருந்து பணி செய்து கொண்டிருந்த நிலையில் அந்த 9 பெண்களை கடந்த 60 நாட்களாக ஹவுஸ் ஓனர் பூட்டி வைத்து இருந்த தகவல்