close
Choose your channels

இந்தியாவில் ஒரே நாளில் 6000க்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Friday, May 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,12,359ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6000க்க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,447ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6088 பேர்கள் கொரோனாவுக்கு புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300ல் இருந்து 48,534ஆக உயர்ந்துள்ளது என்றும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,435ல் இருந்து 3,583ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41642 என்றும், இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 13967 பேர் பாதிக்கப்பட்டதாகவும், மூன்றாவது இடத்தில் குஜராத்தில் 12905 பேர்களும்,, நான்காவது இடத்தில் டெல்லியில் 11659 பேர்களும், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் 6227 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194,879ஆக உயர்ந்துள்ளது என்பதும், உலக அளவில் பலி எண்ணிக்கை 3,34,092 என்பதும் உலக அளவில் 2,081,511 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 16,20,767 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஷ்யாவில் 317,554 பேர்களும், பிரேசிலில் 310,921 பேர்களும், ஸ்பெயினில் 280,117 பேர்களும், இத்தாலியில் 228,006 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.