கொரோனாவால் அனாதையான குழந்தைகள்? அதிர்ச்சி தரும் கணக்கெடுப்பு!

கொரோனா பாதிப்பினால் தாய் மற்றும் தந்தை அல்லது தங்களது பாதுகாவலர்களை இழந்து உலகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையாக மாறியுள்ளனர் என்றும் அமெரிக்க அறிவியல் ஆய்விதழான தி லான்செட் (The Lancet) பகீர் தகவலை வெளியிட்டு உள்ளது.

கொரோனா எனும் கொடுந்துயரில் மாட்டிக்கொண்டு உலக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். உயிரிழப்பு, பொருளாதார இழப்பு, வறுமை, மருத்துவப் பற்றாக்குறை எனப்பல நெருக்கடிக்கு மத்தியில் சிறுவயது குழந்தைகள் பராமரிப்பு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தாய், தந்தை, பாதுகாவலர்களை கொரோனாவிற்கு பலிக்கொடுத்து விட்டு தற்போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதைகளாக மாறி இருக்கின்றனர்.

அதுவும் கொரோனா பரவத் துவங்கிய முதல் 14 வாரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது தாய் அல்லது தந்தை என இருவரில் ஒருவரை இழந்து விட்டதாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தாத்தா, பாட்டியை இழந்து தற்போது பராமரிப்பின்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் மட்டும் 43,139 குழந்தைகள் தங்களது தாய், தந்தையை இழந்து அனாதையாகி இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த அளவு அதற்கு முந்தைய மார்ச் மாதத்தைவிட 8.5% அதிகம் எனவும் புள்ளிவிரவம் தெரிவித்து இருக்கிறது.

இதனால் உலகம் முழுவதும் 15 லட்சம் குழந்தைகள் அனாதையாகி இருக்கின்றனர் என்றும் இவர்களை பாராமரிப்பதற்கு தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூகநல ஆர்வலர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். மேலும் தென்ஆப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மெக்சிகோ போன்ற நாடுகளில்தான் குழந்தைகள் அனாதையாகி இருப்பது அதிகரித்து இருக்கிறது என்றும் லான்செட் ஆய்விதழ் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த உயிரிழப்புகளில் பெண்களின் விகிதத்தை விட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பெண்களை விட 5% ஆண்கள் அதிகமாக இறந்து அவர்களின் குழந்தைகளை அனாதையாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.10 கோடி இழப்பீடு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை வழக்கு!

முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது தமிழ் நடிகை ஒருவர் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சூர்யா 40 படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் மினி டீசர்!

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இது சூர்யாவின் 40வது படம்

3 நடிகைகளை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்தாரா ராஜ்குந்த்ரா?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பிரியாமணி கிரிமினல்...அந்த கல்யாணம் செல்லாது....! கணவரின் முதல் மனைவி குற்றச்சாட்டு.....!

முஸ்தபா ராஜ், நடிகை பிரியாமணியின் கல்யாணம் செல்லாது, அது சட்டவிரோதமானது என அவரின் முதல் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

கனமழையால் கதிகலங்கும் சீனா… அணை உடையும் அபாயம் இருப்பதாக பகீர் தகவல்!

சீனாவின் ஹெனான் மகாணத்தில் கடந்த ஒருசில தினங்களாக கனமழை பெய்துவருகிறது.