close
Choose your channels

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: 2வது இடத்தில் தமிழகம்

Tuesday, May 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 3 கட்ட ஊரடங்கு முடிவடைந்து நான்காம் கட்ட ஊரடங்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்தியாவில் தற்போது 1,00,328 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4630 பேர் ஒருநாள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 131 பேர் மரணம் அடைந்துள்ளதாக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3156 என்பதும் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 39233 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் 35,058 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 11760 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் குஜராத்தில் 11746 பேர்களும், நான்காவது இடத்தில் டெல்லியில் 10054 பேர்களும், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தானில் 5507 பெர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.