அணியின் வெற்றிக்காக பதவி விலகவும் தயார்… பகீர் அறிவிப்பு வெளியிட்ட கேப்டன்!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் இயான் மோர்கன் “அணியின் வெற்றிக்கு தடையாக இருக்க விரும்பவில்லை. அணிக்காக பதவி விலகவும் தயார்“ என்று பகீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை போட்டி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பார்மில் இல்லை. சமீபத்தில் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் படு சொதப்பலாக விளையாடி வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

கேப்டன் இயான் மோர்கன் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாக இருந்து ஐபிஎல் இறுதிப்போட்டி வரை அணியை வழி நடத்திச் சென்றார். இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் இயான் மோர்கன் 40 டி20 போட்டிகளில் விளையாடியதாகவும் அதில் 16.63 சராசரியோடு 499 ரன்களை மட்டுமே குவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் முதல் பாதி போட்டிகளில் இயான் மோர்கனின் அதிகப்பட்ச ரன் 47 ஆக இருந்தது. அடுத்த பாதி ஆட்டத்தில் ஒருமுறைகூட அவர் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இயான் மோர்கன் ஃபார்மில் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் இயான் மோர்கன், “நான் அணியின் நிரந்தர வீரர் கிடையாது. இங்கிலாந்து அணியின் பாதையில் இடையூறாக இருக்க மாட்டேன். என்னுடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால் எமது கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது. அதில் எவ்வித குறையும் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ஒருவேளை என்னுடைய பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாக இருந்தால் பிளேயிங் லெவன்-இல் இருந்து வெளியேறுவேன். பௌலராகவோ அல்லத பீல்டராகவோ பங்களிப்பு செய்வதைவிட கேப்டன் பணியைத்தான் அதிகம் விரும்புகிறேன். நாங்கள் ஏற்கனவே உலகக் கோப்பையை வென்றிருக்கிறோம். இப்போதும் கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும். கடந்த 6 ஆண்டுகளில் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கவில்லை. தறபோது திறமையான இளம் வீரர்களும் அணிக்குள் வந்திருக்கிறார்கள். இதனால் அணி மேலும் பலமாக மாறியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

More News

பெயரை மாற்றுகிறதா ஃபேஸ்புக்… இணையத்தில் உலாவும் தகவல்!

சோஷியல் மீடியா நிறுவனங்களில் மிகவும் முன்னோடியாக விளங்கக்கூடிய ஃபேஸ்புக் தனது பெயரை மாற்றிக்கொள்ள இருப்பதாகத் தகவல்

வெளுத்து வாங்கும் கனமழையால் அதிகரிக்கும் உயிரிழப்பு!

உத்திரகாண்ட்டில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல்

26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நாயகியாகும் கமல் பட நடிகை: இயக்குனர் இவர்தான்!

கடந்த 1995ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'சதிலீலாவதி' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த காமெடி நடிகை கோவை சரளா இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக

இயக்குனர் ஷங்கர் மருமகன் மீது வழக்குப்பதிவு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடுரோட்டில் மன்னிப்பு கேட்டாரா தமிழ் நடிகை: அவரே அளித்த விளக்கம்!

ஜிவி பிரகாஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த தமிழ் நடிகை ஒருவர் நடுரோட்டில் மன்னிப்பு கேட்டதாக இணைய தளங்களில் பரவி வரும் வீடியோவுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்