அகில இந்திய அளவில் ரஜினி, அக்சயகுமாரை முந்திய தளபதி விஜய்!

  • IndiaGlitz, [Sunday,July 19 2020]

கொரானா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்பதும் இனி எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது தெரியாத நிலையே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் பொது மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான் என்பதும் அதிலும் தொலைக்காட்சி தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்படங்கள் மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு பொழுதுபோக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அகில இந்திய அளவில் இந்த கொரோனா விடுமுறையில் யாருடைய திரைப்படங்கள் அதிக அளவு பார்க்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஒரு பட்டியலில் தளபதி விஜய்யின் படத்தை பார்த்தவர்கள் எண்ணிக்கை தான் அதிக அளவில் உள்ளது என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். அதாவது விஜய்யின் திரைப்படங்களை இந்த கொரோனா விடுமுறையில் 117.9 மில்லியன் பேர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை அடுத்து ராகவா லாரன்ஸ் திரைப்படங்களை 76.2 மில்லியன் பேர்களும், ரஜினிகாந்த் படங்களை 65.8 மில்லியன் பேர்களும், அக்சய்குமார் திரைப்படங்களை 58.8 மில்லியன் பேர்களும், பிரபாஸ் திரைப்படங்களை அடுத்து 56.9 மில்லியன் பேர்களும் பார்த்துள்ளனர்.

அகில இந்திய அளவில் தமிழ் நடிகர் விஜய்யின் திரைப்படங்களைத்தான் மிக அதிக அளவிலான பொதுமக்கள் பார்த்துள்ளனர் என்பதும் சூப்பர் ஸ்டார்களான ரஜினி, அக்சய்குமார் ஆகியோர்களை விஜய் பின்னுக்கு தள்ளி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினி, அக்சய்குமார், விஜய் ஆகியோர்களை ஒப்பிடும்போது மிகக்குறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ள ராகவா லாரன்ஸ் திரைப்படங்கள் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது ஆச்சரியமான தகவல் ஆகும்.

More News

அஜித், விஜய் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்தது ஒரே நபரா? பரபரப்பு தகவல்

தல அஜித் வீட்டில் நேற்று வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட

பள்ளிகள் திறப்பது எப்போது? மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை

ரஜினியை அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கோச்சடையான்' திரைப்படத்தில் நடித்த பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே தற்போது பிரபல தென்னிந்திய நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

'சூரரை போற்று' படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் நடைபெற்று வந்தது.

கண்ணாடி கோப்பையில் மதுவும், கவர்ச்சி உடையும்: அமலாபாலின் சேப்டர் 2

கொரோனா லாக்டவுன் விடுமுறையில் படப்பிடிப்பில் இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு