close
Choose your channels

வறுமையால் பள்ளிச்சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்: இன்ஸ்பெக்டரின் கணவரும் உடந்தையா?

Tuesday, September 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பள்ளியில் படிக்கும் 2 மகள்களை விபச்சாரத்தில் ஒரு பெண் ஈடுபடுத்தியதாகவும், அதற்கு இன்ஸ்பெக்டர் ஒருவரின் கணவரும் உடந்தையாக இருந்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்ற பகுதியில் லதா என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வறுமையில் இருந்த லதா, தனது மகள்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்தார். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அந்த வீட்டிற்கு தன்னுடைய மகள்களை அழைத்துச் சென்று பலருக்கு விருந்தாக்கியுள்ளார். இதற்கு உள்ளூர் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கணவரும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் குறிப்பிட்ட வீட்டில் அடிக்கடி ஆண்கள் சென்று வருவது குறித்து சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை செய்தபோது 2 பேரை கைது செய்தனர். ஒருவர் கூலித் தொழிலாளி என்றும் இன்னொருவர் அந்த பகுதி காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் என்றும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதனை அடுத்து லதாவின் மகள்கள் உள்பட நான்கு சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் கணவர், லதா மற்றும் கூலி தொழிலாளி ஆகியோர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வறுமை காரணமாக பள்ளியில் படிக்கும் மகள்களை பெற்ற தாயே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.