close
Choose your channels

மகளின் திருமண மேடையில் அம்மாவிற்கும் திருமணம்… ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி சம்பவம்!!!

Monday, December 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகளின் திருமண மேடையில் அம்மாவிற்கும் திருமணம்… ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி சம்பவம்!!!

 

இந்தியக் கலாச்சாரத்தில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா? எனும் அளவிற்கு உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று இருக்கிறது. லக்னோ அடுத்த கோரக்பூர் பகுதியில் தனது இளைய மகளின் திருமணத்தின்போதே ஒரு தாயும் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இதைப் பார்த்த பலரும் அந்தத் தாய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோரக்பூர் பகுதியில் வசித்து வரும் பெலிதேவியின் கணவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 5 குழந்தைகளை பெற்ற இவர் தனது 2 மகன் மற்றும் 2 மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் நடத்தி வைத்து விட்டார். இந்நிலையில் கடைசி மகளின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்தத் திருமணத்தின்போதே பெலிதேவியும் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

கோரக்பூரில் ஒரே மேடையில் 63 திருமணங்கள் நடத்தும் ஒரு திருமண விழா நடைபெற்று இருக்கிறது. இத்திருமண மேடையில்தான் தாய், மகள் என இருவரின் திருமணமும் ஒரே நேரத்தில் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. 25 வருடத்திற்கு முன்பு இறந்து போன தனது கணவரின் சகோதரரையே பெலிதேவி மணந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருமணம் குறித்து அவரது இளைய மகளும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.