close
Choose your channels

4 நாள் உடையுடன் 2 மாதங்கள் அபுதாபியில் சிக்கித்தவிக்கும் நடிகை

Friday, May 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நான்கு நாட்கள் பயணமாக கடந்த மார்ச் மாதம் அபுதாபி சென்ற நிலையில் ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களாக அந்நாட்டில் சிக்கி தவித்து வரும் தகவல் தற்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாலிவுட் நடிகை மௌனி ராய் கடந்த மார்ச் மாதம் விளம்பர படமொன்றின் படப்பிடிப்பிற்காக அபுதாபி சென்றார். அந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் மட்டுமே நடைபெறும் என்பதால் நான்கு நாட்களுக்குத் தேவையான உடைகளை மட்டுமே அவர் எடுத்துச் சென்றுள்ளார். இதனிடையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அபுதாபியில் கடந்த இரண்டு மாதங்களாக நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளோடு நடிகை மெளனிராய் சிக்கி தவித்து வருகிறார்

இது குறித்து அவர் கூறியபோது ’இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவே இல்லை என்றும் ஒவ்வொரு நாளும் விமானங்கள் எப்போது கிளம்பும் என்பதை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் இருப்பினும் இங்கு ஒருசில நண்பர்கள் இருக்கின்ற காரணத்தினால் தனக்கு நிம்மதியாக இருப்பதாகவும் விரைவில் இந்தியாவிற்கு திரும்ப தான் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த ஊரடங்கில் தனக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நல்ல பாடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகை மெளனிராய் கடந்த இரண்டு மாதங்களாக அபுதாபியில் சிக்கி தவித்து வரும் தகவல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.