தமிழகத்தில் திரைத்துறை பணிகள் ரத்து: ஆர்கே செல்வமணி பேட்டி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும், நேற்றும் தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும், இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரடங்கு ஒருபக்கம் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் மே 31-ஆம் தேதி வரை திரைத்துறை பணிகள் ரத்து என்று கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மே 31 வரை அனைத்து திரைப்படங்களும் ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு முன்னணி நடிகர் நடிகைகள் உதவ முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போதும், ஆர்கே செல்வமணி இதே போன்ற ஒரு வேண்டுகோளை அவர் விடுத்திருந்தார் என்பதும் இதனை அடுத்து பல முன்னணி நடிகர்கள் லட்சக்கணக்கில் பெப்ஸி தொழிலாளர்களுக்கான நிதி உதவி செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நேற்று ரூ.25 லட்சம், இன்று ரூ.10 லட்சம்: தல அஜித்துக்கு குவியும் வாழ்த்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால் தமிழக அரசுக்கு தாராளமாக நிதி கொடுத்து உதவி செய்ய வேண்டும்

WAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள டிஎம்எஸ் வணிக வளாகத்தில் WAR ROOM எனப்படும் கட்டளை மையம் ஒன்று இயங்கி வருகிறது.

பிரபல நடிகரின் மனைவில் தூக்கில் தொங்கி தற்கொலை: திருமணமான ஒன்றரை வருடத்தில் விபரீதம்!

பிரபல நடிகர் ஒருவரின் மனைவி திருமணமான ஒன்றரை வருடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ....! ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...!

மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல  ஆம்புலன்ஸ் வாங்கி தந்துள்ளார், கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த்.

கணம் கோட்டாரே உங்களுக்குமா? கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்!

கொரோனா பரவல் ஆரம்பத்ததில் இருந்தே விதவிதமான விழிப்புணர்வு விளம்பரங்கள் காலர் டியூனாக செல்போன்களில் ஒலித்து வருகிறது.