24 பேரை காவு வாங்கிய விஷசாராய வழக்கின் முக்கியக் குற்றவாளி சென்னையில் கைதா?

  • IndiaGlitz, [Monday,January 18 2021]

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 11 ஆம் தேதி விஷச்சாரயம் அருந்தி 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொரேனா மாவட்டத்தை அடுத்த மான்பூர் மற்றும் பகாவலி ஆகிய இரு கிராமங்களிலும் நடைபெற்ற இச்சம்பவத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் 7 பேர் சம்பந்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படும் நிலையில் முகேஷ் கிரார் என்பவர் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அந்த 7 குற்றவாளிகளும் தலைமறைவு ஆகியதாகக் கூறப்பட்டது. இதனால் அக்குற்றவாளிகளின் தலைகளுக்குப் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டன. மேலும் இச்சம்பவம் நடைபெற்ற மான்பூர் மாவட்டத்தின் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, பாகினி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இத்தனை சர்ச்சைகளை ஏற்படுத்திய விஷசாராய வழக்கின் முக்கியக் குற்றவாளி முகேஷ் கிராரி நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மத்தியப் பிரதேச போலீஸார் நேற்று சென்னையில் நடத்திய தேடுதல் வேட்டையில் முகேஷ் பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மொரேனா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்கு பல தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

More News

மொய்ப்பணத்தை இப்படியும் வசூலிக்கலாமா? அசத்தும் புது ஜோடி!!!

மாமன் சீர் மாதிரி மொய்ப்பணமும் ஒருவரின் கவுரவத்தையே எடுத்துக் காட்டுகிறது

பிக்பாஸ் போட்டியாளர்களின் வருமானம் எவ்வளவு? 106 நாட்கள் இருந்த பாலாவுக்கு இவ்வளவுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 106 நாட்கள் நடந்து நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே.

விஷ்ணு விஷாலின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தொடக்கம்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் நடந்தது. இதனை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 

பிக்பாஸ் முடிந்ததும் திடீரென பிரச்சாரத்தையும் நிறுத்திய கமல்: என்ன காரணம்?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தேர்தல் பிரச்சாரத்தையும் மாறி மாறி செய்து வந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் நேற்று உடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை

ஃபர்ஸ்ட் பால் கண்ணுக்கே தெரியல்ல: நடராஜனின் ஜாலி வீடியோ வைரல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேன் நகரில் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.