திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகருடன் மிருணாள் தாக்குர் காதலா? வைரல் புகைப்படம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகருடன் நடிகை மிருணாள் தாக்குர் காதலுடன் இருக்கிறார் என்று தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை மிருணாள் தாக்குர், துல்கர் சல்மான் நடித்த ’சீதாராமம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் விரைவில் தமிழிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை மிருணாள் தாக்குர் , சுமந்த் என்ற நடிகருடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ’சீதாராமம்’ திரைப்படத்தில் நடிகர் சுமந்த் ஒரு வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அந்த நட்பு தற்போது காதல் ஆக மாறி உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் தனுஷ் நடித்த ’வாத்தி’ என்ற படத்தில் நடிகர் சுமந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் மிருணாள் தாக்குர் மற்றும் சுமந்ந் ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டாலும் இருதரப்பிலிருந்து இது குறித்து எந்தவித உறுதி செய்யப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சுமந்த் ஏற்கனவே நடிகை கீர்த்தி ரெட்டி என்பவரை திருமணம் செய்து அதன் பின் விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments