தோனிக்கு 50% அபராதம்: கூல் கேப்டனையே கடுப்பேத்திய அம்பயர்! 

உலகின் ஜெண்டில்மேன் கிரிக்கெட் கேப்டன் என்றால் அதில் முதலிடத்தில் தல தோனி இருப்பார் என்பது அனைவரும் தெரிந்ததே. தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் கடைசி வரை டென்ஷன் ஆகாமல் பொறுப்புடன் ஆடி வெற்றி தேடி தரும் கூல் கேப்டனையே நேற்றைய போட்டியில் அம்பயர் கடுப்பேற்றிவிட்டார்.

நேற்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற 6 பந்தில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் ஸ்டோக் வீசிய ஒரு பந்து பேட்ஸ்மேனின் முகத்திற்கு நேராக வந்ததால் ஒரு அம்பயர் நோபால் கொடுத்தார். ஆனால் இன்னொரு அம்பயர் அது நோபல் இல்லை என்று கூறி மறுத்தார். இதனை வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த தல தோனி, உடனே களத்திற்குள் வந்து இரண்டு அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்தார். தோனி இதுபோல் அம்பயர்களிடம் ஆவேசமாக பேசி யாரும் பார்த்திருக்கவில்லை என்பதால் நேற்று அவருடைய கோபத்தை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

இந்த நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறி அம்பயருடன் தோனி வாக்குவாதம் செய்ததற்காக தோனியின் சம்பளத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மதுவிலக்கை அமல்படுத்தினால் மாஃபியா பெருகிவிடும்: கமல் சர்ச்சை பேச்சு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மதுவினால் பல தாய்மார்களின் தாலி பறிபோவதால் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் நாளுக்கு நாள் ஓங்கி ஒலித்து வருகிறது.

மணிரத்னம் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்-மடோனா!

மணிரத்னம் இயக்கவுள்ள மல்டிஸ்டார் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது தயாரிப்பில்

ஜெய்ப்பூரிலும் எங்க தர்பார் தான்: வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங்கின் டுவீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் சிஎஸ்கே ரசிகர்கள் உடனே செல்வது ஹர்பஜன் சிங்கின் டுவிட்டர் பக்கத்திற்காகதான் இருக்கும்.

ஆளப்போறான் தமிழனின்' 100 மில்லியன் அசத்தல் சாதனை

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இங்கிலாந்து: 160,100 சதுர அடியில் உலகில் மிகப்பெரிய மால் இன்று திறப்பு: 

இங்கிலாந்து நாட்டில் உள்ள பிர்மிங்காம் என்ற நகரில் இன்று உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் திறக்கப்பட்டுள்ளது. பிரைமார்க் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மால் இன்று திறப்பு விழாவை