close
Choose your channels

உலகக்கோப்பைக்கு பின் நாட்டுக்கு சேவை செய்ய செல்கிறார் தோனி!

Saturday, July 20, 2019 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் தல தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டார் இன்னும் சில ஆண்டுகளில் கிரிக்கெட்டில் நீடிப்பார் என்றும் இருவேறு கருத்துக்கள் பரவியுள்ளன. மேலும் திடீரென பாஜகவில் தோனி சேர இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வந்தது 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனி இன்று பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் தான் துணை ராணுவப் பணியில் இரண்டு மாதங்கள் ஈடுபட உள்ளதாகவும் அதனால் மேற்கிந்தியத் தீவு சுற்றுப்பயணத்தில் தன்னால் பங்கேற்க முடியாது என்றும் அவர் எழுதியுள்ளார். இதனை அடுத்து தோனி மேற்கிந்திய தீவுகள் தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. தோனிக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் நாட்டிற்காக சேவை செய்ய இந்திய ராணுவத்தில் பணிபுரிய தோனி எடுத்திருக்கும் முடிவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.