close
Choose your channels

துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த எம்.எஸ்.சி படிக்கும் பெண்..!

Tuesday, March 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த எம்.எஸ்.சி  படிக்கும் பெண்..!

கோவையில் எம்.எஸ்.சி படிக்கும் பெண் மாநகராட்சி துப்புரவாளர் பணியில் சேர்ந்துள்ளார்.கோவையில் மாநகராட்சியில் காலியாக இருந்த 549 துப்புரவு பணியாளர்கள் இடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு விடப்பட்டிருந்தது. இந்த வேலைக்கு பி.எஸ்.சி, பி.காம், பி.இ படித்த பட்டதாரிகள் உட்பட 7,300 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. அதில் 321 பேருக்கு குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பணிநியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கோவை தெலுங்குப்பாளையாத்தைச் சேர்ந்த மோனிகா என்பவருக்கு பணிநியமன ஆணையானது வழங்கப்பட்டது. இவர் எம்.எஸ்.சி படித்து வருகிறார்."படித்திருக்கிறேன் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டேன் என்பதிலை எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன்" என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.