பேத்தியின் படிப்புக்காக வீட்டை விற்றுவிட்டு ஆட்டோவிலேயே வாழும் முதியவர்… பின்னர் நடந்த டிவிஸ்ட்!

  • IndiaGlitz, [Wednesday,February 24 2021]

மும்பையில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வரும் 74 வயது முதியவர் நாராயணா. இவருடைய பேத்தியின் பி.எட் படிப்புக்காக சொந்த வீட்டை விற்றுவிட்டு குடும்ப உறுப்பினர்கள் 8 பேரை மற்ற உறவினர்களின் வீட்டில் தங்க வைத்து உள்ளார். மேலும் குடும்பச் செலவுகளுக்காக காலை 6 மணி முதல் நள்ளிரவு முடிய ஆட்டோ ஓட்டும் இவர் ஆட்டோவிலேயே தங்கி, தூங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார்.

நாராயணாவின் 2 மகன்களும் இறந்து விட்ட நிலையில் அவர்களின் மனைவி மற்றும் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். குடும்பச் செலவுகளுக்காக பல வருடங்களாக இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய பேத்தி 12 ஆம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்று நாராயாணாவை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க வைத்தார். அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பை முடித்த பேத்தியின் பி.எட் படிப்புக்காக சொந்த வீட்டையும் விற்றுள்ளார்.

மேலும் என்னுடைய பேத்தி ஆசிரியராகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவர் ஆசிரியராக உயர்ந்து விட்டால் எல்லோரையும் இலவசமாக ஆட்டோவில் அழைத்துச் செல்வேன் எனத் தனது சந்தோஷத்தை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து வியந்து போன சிலர், நாராயணா பற்றி தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

பின்னர் நாராயணா பற்றிய பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இதுவரை 24 லட்சம் நன்கொடை கிடைத்து இருக்கிறது. இதனால் குளிர்ந்து போன நாராயணா ஒரு சொந்த வீட்டை வாங்கிக் கொள்வதாகவும் பேத்தியின் படிப்புச் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். பேத்தியின் படிப்புக்காக போராடும் முதியவரின் உழைப்பு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More News

காதலருக்கு ஒட்டகச் சிவிங்கியைக் கொன்று அதன் இதயத்தை பரிசளித்த காதலி!

தென் ஆப்பிரிக்காவில் இளம்பெண் ஒருவர் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி கொன்று அதன் இதயத்தை தனியாக எடுத்து தன் காதலருக்குப் பரிசளித்து உள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாள், ஸ்ரீதேவி மறைந்த நாள்: இருவரும் இணைந்த புகைப்படம் வைரல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசு

பிக்பாஸ் சீசன் 5 எப்போது? ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை? அசத்தும் புது கண்டுபிடிப்பு!

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து உலகம் இன்னும் விடுபடாமலே இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் நாள்தோறும் கொரோனா எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

சசிகலாவை சீமானும் சந்தித்தார்: அரசியல் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதா?

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக முழு ஓய்வில் இருந்தார்.