close
Choose your channels

வழுக்கை தலையை மறைத்து திருமணம்: போலீஸில் புகார் அளித்த மணமகள்!

Sunday, November 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வழுக்கைத் தலையை மறைத்து விக் வைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கணவர் மீது புதுமணப் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் திருமணம் முடிந்த சில நாட்களில் தனது 29 வயது கணவர் மீது திடீரென காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவருக்கு வழுக்கைத்தலை என்றும் ஆனால் விக் வைத்து மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அதிக வரதட்சணை கேட்டு தனது கணவரும் அவருடைய குடும்பத்தினரும் கொடுமை செய்கிறார்கள் என்றும் இயற்கைக்கு மாறான உறவுக்கு கட்டாயப்படுத்துவதாகவும், அவர் தனது புகாரில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவரையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். வழுக்கை தலையை மறைத்த கணவர் மீது புதுமணப்பெண் ஒருவர் புகார் கொடுத்த பின்னால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.