close
Choose your channels

ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா? சம்மன் அனுப்பிய போலீஸ்!

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை இன்று மேலும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் மீண்டும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ராஜ்குந்த்ரா ஆபாச பட விவகாரம் குறித்து விசாரணை செய்துவரும் போலீசார் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குந்த்ராவின் ஆபாச படத்தில் கவர்ச்சி நடிகைகள் சிலரும், பிரபல நடிகைகளும் நடித்து உள்ளார்கள் என்றும் அவர்களிடமும் விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

அந்த வகையில் தமிழில் ஜீவன் நடித்த ‘யுனிவர்சிட்டி’ என்ற திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய நடிகை ஷெர்லின் சோப்ராவை விசாரணை செய்ய காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து நேரில் ஆஜராவதை தவிர்க்கவும் கைது செய்யப்படாமல் தப்பிக்கவும் முன் ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் நடிகை ஷெர்லின் சோப்ரா மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜ்குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் ஷெர்லின் சோப்ரா மட்டுமின்றி மேலும் சில பிரபல நடிகைகளையும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.