close
Choose your channels

அன்பு நாடகம் போய் அழுகை நாடகம்: இதுவும் மும்தாஜின் யுக்தியா?

Wednesday, September 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஆரம்பம் முதல் தந்திரமாகவும், பாதுகாப்பாகவும் விளையாடுபவர் மும்தாஜ் மட்டுமே. தனக்கு தேவையான சலுகைகளையும் பெற்று கொண்டு, டாஸ்க்கில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளாமல், அதே நேரம் அன்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி அனைவரையும் தன் கைக்குள் வைத்து கொண்ட மும்தாஜ், தனக்கு பிடிக்காதவர்களை சாமர்த்தியமாக வெளியேற்றும் தந்திரத்தையும் கையாண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் மும்தாஜின் அன்பு நாடகம் கமல் உள்பட அனைவருக்கும் தெரிய வந்துள்ளதால் அவர் மீதான மதிப்பும் குறைந்துவிட்டது. குறிப்பாக பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் மும்தாஜை கார்னர் செய்ய ஆரம்பித்தவுடன் அவரது மன உறுதியும் குலைந்து போய்விட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் அன்பு நாடகம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து அனுதாபத்தை பெற தற்போது மும்தாஜ் அழுகை என்ற ஆயுதத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டார். போட்டியாளர்களின் குறைகளை பொதுவாக சினேகன் சுட்டிக்காட்டிய போது மும்தாஜ் தன்னைத்தான் அவர் கூறியதாக நினைத்து அழுக ஆரம்பித்துவிட்டார். அவரது அழுகையால் யாருக்கும் பரிதாபம் ஏற்படவில்லை. மாறாக அவர் மீண்டும் நடிப்பதாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர். எனவே ஐஸ்வர்யாவை வெளியேற்றியவுடன் மக்களின் அடுத்த குறி மும்தாஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.