close
Choose your channels

நடை பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 19 வயது வீராங்கனை… குவியும் பாராட்டு!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அசாம் மாநிலத்தின் சாருசஜாய் மைதானத்தில் 36 ஆவது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி நகரைச் சேர்ந்த 19 வயது இளம் வீராங்கனை தேசிய அளவில் புதிய சாதனையைப் படைத்து தங்கப்பதக்கம் வென்று உள்ளார்.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் 10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்தில் 19 வயதான இளம் வீராங்கனை முனிடா பிரஜாபதி கலந்து கொண்டார். இதில், வெறுமனே 47 நிமிடங்கள் மற்றும் 53.58 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றார். இதனால் முனிடாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி போபாலில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜுனியர் சாம்பியன்ஷிப் பெடரேசன் கோப்பை போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ரேஷ்மா பட்டேல் என்ற 16 வயது இளம் வீராங்கனை 48 நிமிடங்கள் மற்றும் 25.90 வினாடிகளில் இலக்கை தொட்டு தங்கம் வென்றார். அந்தப் போட்டியில் முனிடா 3 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அதனை ஈடு செய்யும் வகையில் தற்போது அசாமில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பெற்று அதுவும் குறைந்த வினாடிகளில் இலக்கை அடைந்து முனிடா பிரஜாபதி புதிய சாதனை படைத்து உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.