close
Choose your channels

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக்கொலை… முன்விரோதம் காரணமா?

Thursday, April 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திரமாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்டத்தை அடுத்த ஜுட்டாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாராவ். இவருடைய வீட்டில் நுழைந்த பக்கத்து வீட்டுக்காரர் அப்பல்ராவ் 2 மாதக் குழந்தை உட்பட அக்குடும்பத்தைச் சேர்நத் 6 பேரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமாராவ் நேற்று வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது பக்கத்து வீட்டுக்காரரான அப்பல்ராவ் உள்ளே நுழைந்து இருக்கிறார். மேலும் ராமாராவ், அவரது மனைவி உஷா, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ரமாதேவி, அருணா, 2 வயது மகன் உதய், இரண்டு மாதக்குழந்தை ஊர்நிஷா எனும் 6 பேரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரக் கொலைக்கு முன்விரோதம் மட்டுமே காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் அப்பல்ராவ் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. கொலை குறித்த தகவல்களை அக்கம் பக்கத்து வீட்டார் கூற, காவல்துறையினர் இறந்த உடல்களைக் கைப்பற்றி உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அப்பல்ராவை போலீஸார் தொடர்ந்து தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.