நான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஒரு இசையமைப்பாளரின் ஆதங்கம்!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

'என்னை தெரியுமா', 'மாலை பொழுதின் மயக்கத்திலே', 'அப்பாவின் மீசை', 'உறுமீன்', 'கோலி சோடா 2' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் அச்சுமணி. தற்போது நடிகை வரலட்சுமி நடித்து வரும் 'வெல்வெட் நகரம்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலான 'சின்னஞ்சிறு கிளியே' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த பாடல் வெளியானதே பலருக்கு தெரியவில்லை என்பதால் இந்த பாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை அவர் செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள டுவீட் இதுதான்:

ரசிகர்களுக்காக இதுவரை கேட்டிராத வகையில் ஒரு பாடலை தருவது முக்கியமல்ல. அந்தப் பாடல் மக்களிடம் சென்றடையவில்லை என்றால் அது என் தவறா என்று தெரியவில்லை. சின்னஞ்சிறு கிளியே பாடல் கேட்டவர்கள் அனைவருக்கும் அது பிடித்தது. உங்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

தொடர்ந்து என் மீது அன்பு செலுத்தி ஆதரித்து வரும் திங்க் மியூஸிக் இந்தியாவுக்கு நன்றி. இந்தப் பாடல் வெளிவந்ததில் எனக்கும் இயக்குநர் மனோஜுக்கும் மகிழ்ச்சி. பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டும் தான் கவனம் கிடைக்கும் என நினைக்கிறேன். ஊடகத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு என் போன்றவர்களை ஆதரிக்க மனமோ, விருப்பமோ இருப்பதில்லை.

என்னைப் போன்றவர்கள் எப்போதும் தொடர்ந்து போட்டியிடுபவர்களாக, குறைவாக மதிப்பிடப்படுபர்களாக மட்டுமே இருப்போம். பாடலைக் கேட்டு ட்வீட் செய்த ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் நன்றி. இது மிகப்பெரிய விஷயம்.

நான் இதுவரை இது போல எப்போதும் பேசியதில்லை. ஆனால் இது அதற்கான நேரம். என்னையும், என் இசையையும் தெரிந்தவர்களுக்கு, நான் எவ்வளவு தனித்து விடப்பட்டுள்ளேன் என்பது தெரியும். நமது படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதபோது அது வலியைத் தரும்தான். ஆனால் இது என்னை நிறுத்தாது. மாறாக என்ன இன்னும் ஊக்குவிக்கத்தான் செய்யும்.

நான் எப்போதும் எனது சிறந்த முயற்சியைத் தருகிறேன். அதை என்றும் தொடருவேன். அவ்வளவுதான்.

இவ்வாறு இசையமைப்பாளர் அச்சுமணி தெரிவித்துள்ளார்.

More News

தாயின் கர்ப்பத்திற்குள் சண்டை போட்ட இரட்டையர்கள்: வைரலாகும் வீடியோ!

ஒரே தாய்க்கு பிறந்த அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை சண்டை போடுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஏன் இரட்டையர்களாக பிறந்தாலும் அவர்களுக்குள் சண்டை வருவது சகஜம் தான்.

ஆறு வருடம் கழித்து மூடர் கூடம் நவீனின் திருமண டுவீட் ஏன்?

'மூடர் கூடம்' என்ற ஒரே ஒரு படத்தால் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நவீன், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த படத்தில் நடித்திருந்த சிந்து என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

3D கண்ணாடி ஆர்டர் பண்ணிட்டேன்: விஜய்சங்கரை கிண்டல் செய்தாரா அம்பத்தி ராயுடு?

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விராத் கோஹ்லி, தோனி, ரோஹித்சர்மா ஆகியோர்களுக்கு அடுத்தபடியாக அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள அம்பத்தி ராயுடு

பாறை இடுக்கில் கிடந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம்! நடந்தது என்ன? பதற வைக்கும் சம்பவம்!

வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா வந்த இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில்

எதையும் சந்திக்க தயார்! ஐடி ரெய்டுக்கு பின் கனிமொழி பேட்டி!

தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.