'பொன்னியின் செல்வன்' பார்த்த பிறகு இதையெல்லாம் நிறுத்திவிட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்த்த பிறகு ஓடிடியில் பிரமாண்டமான படங்களை பார்க்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் பேசியுள்ளார்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் வரும் 30ஆம் தேதி முதல் பாகம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தமிழகம், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக அளவில் இந்த படத்திற்காக புரமோஷன் செய்யப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் பேசும் போது, ‘பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தபிறகு அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றில் வெளியாகும் வெளிநாட்டு பிரமாண்டமான படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

நம்ம ஊரில் இப்படிப்பட்ட அற்புதமான கதைகள் இருக்கும்போது, நம்ம ஊரிலும் திறமையான நடிகர்கள் இருக்கும்போது எதற்காக வெளிநாட்டு படங்களை பார்க்க வேண்டும்? ‘பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்களுக்கும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறினார்

More News

'பொன்னியின் செல்வன்' நகைகள் விற்பனை.. போட்டி போட்டு வாங்கும் பொதுமக்கள்!

'பொன்னியின் செல்வன்' நகைகள் நகை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் இதனையடுத்து அந்த நகைகளை வாங்க பொது மக்கள் போட்டி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 18 வயது இளம்பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை?

இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 18 வயது இளம் பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'நதிகளிலே நீராடும் சூரியன்' கதை என்ன? சிம்பு தான் ஹீரோவா? கெளதம் மேனன் விளக்கம்!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த படம்தான் பின்னர் 'வெந்து தணிந்தது காடு' என்று மாற்றப்பட்டதாகவும்

ஒரே ஒரு ஊருக்குள்ள ரெண்டு ராஜா.. தனுஷ் உடன் பாடியது இந்த பிரபலமா?

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'நானே வருவேன்'. தனுஷ் வித்தியாசமான இரட்டை வேடங்களில் அண்ணன் தம்பி கேரக்டரில் நடித்துள்ள இந்த படம்

கெளதம் மேனனின் அடுத்த படம் ஆக்சனா? ரொமான்ஸா? அவரே அளித்த பதில்!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் ஆகிய இரண்டும் கலந்த ஒரு கலவையாக இருந்த நிலையில்