3வது மகளுடன் டி இமான்: சொந்த மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமான பதிவு

  • IndiaGlitz, [Wednesday,May 18 2022]

இசையமைப்பாளர் டி இமான் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில் தனக்கு மூன்றாவது மகள் கிடைத்திருப்பதாகவும் இருப்பினும் தனது சொந்த இரு மகள்களுக்காக காத்திருப்பதாகவும் உருக்கமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்த நிலையில் சமீபத்தில் அமலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம் .

இந்த நிலையில் டி இமான் தனது சமூக வலைத்தளத்தில் தனது இரண்டாவது திருமணம் குறித்து கூறியிருப்பதாவது: கடந்த ஞாயிறு அன்று மறைந்த பிரபல கலை இயக்குனர் உபால்ட் என்பவரின் மகள் அமலியை நான் திருமணம் செய்து கொண்டேன். நான் வாழ்வில் கடினமான தருணங்களில் இருந்தபோது எனக்கு ஆதரவாக இருந்த எனது தந்தைக்கு நான் எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

முழுக்க முழுக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்த இந்த திருமணம், கடந்த சில வருடங்களாக எனக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் தீர்வாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து அமலியை எனக்கு அறிமுகம் செய்த எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன் .

அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் எனது சொந்த மகள்களான வெரோனிகா மற்றும் பிளக்சிக்கா ஆகியோர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு வருத்தமாக உள்ளது. அவர்களை இந்த தருணத்தில் நான் மிஸ் செய்கிறேன். இருப்பினும் அவர்கள் என்னிடம் விரைவில் வரும் வரை பொறுமையுடன் காத்திருக்கின்றேன். நான், என் மனைவி அமலி மற்றும் எங்கள் மகள் நேத்ரா, எங்கள் உறவினர்கள் ஆகிய அனைவரும் எனது மகள்கள் வந்தால் அவர்கள் மீது அன்பு செலுத்த காத்திருக்கின்றோம்.

அமலியின் குடும்பத்தினர் அனைவரும் என்மீது காட்டிய அளப்பரிய அன்பு, ஆதரவுக்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன். இந்த தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

More News

சினிமாவில் எண்ட்ரியாகும் முக்கிய கிரிக்கெட் பிரபலம்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஓப்பனராக இருந்துவரும் முக்கிய வீரர் ஒருவர் பாலிவுட் சினிமாவில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: நடிகைக்கு 8 ஆண்டுகள், கணவருக்கு 14 ஆண்டுகள் சிறை!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகைக்கு 8 ஆண்டுகளும் அவரது கணவருக்கு 14 ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

விஜய் படத்தை தயாரிக்க போனிகபூர் விதித்த இரண்டு நிபந்தனைகள்!

விஜய் படத்தை தயாரிக்க தயார் என்றும் ஆனால் இந்த இரண்டும் அந்த படத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் போனிகபூர் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது .

சுந்தர் சியின் 'வேட்டைகள் ஆரம்பம்': இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகரும் இயக்குனருமான சுந்தர்சி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பட்டாம்பூச்சி' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே 

சூர்யா-கார்த்தி பட நடிகைக்கு வளைகாப்பு: அசத்தலான புகைப்படங்கள்!

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகைக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன