உலக மக்களோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்: பிரபல இசையமைப்பாளர்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது உடல்நிலை தேறி வருவதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஆகியோர் எஸ்பிபிக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர். இசையமைப்பாளர் தேவா கூறியபோது, ‘எஸ்பிபி அவர்களே இந்த உலக மக்களோடு சேர்ந்து நாங்களும் தினமும் உங்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறோம். நீங்கள் பூரணமாக குணமடைய வேண்டும். முன்மாதிரி திரும்பவும் வர வேண்டும்' என்று வாழ்த்துகிறோம் என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா கூறிய போது ’நீங்கள் நிச்சயமாக சீக்கிரம் வர வேண்டும் உங்களுக்காக நாங்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம். இந்த உலகமே பிரார்த்தனை செய்கிறது. உங்களை நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர்கள் பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது தேனிசை தென்றல் தேவா மற்றும் அவரது சகோதரரும் எஸ்பிபி பிரார்த்தனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி சிக்கிரம் குணமாக வேண்டும்: ரஜினிகாந்த்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

14 வருடங்களுக்கு முன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபல காமெடி நடிகர்: வைரலாகும் புகைப்படம்

14 வருடங்களுக்கு முன் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பிரபல காமெடி நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தல தோனி 7.29க்கு ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்

கடந்த 15ஆம் தேதி இந்திய நாடே சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது சரியாக இரவு 7.29 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வு முடிவை தல தோனி அறிவித்தார்

பேண்ட்டை திருப்பி போட்டுட்டாரா ஷிவானி? நெட்டிசன்கள் கிண்டல்

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பேஸ்புக் பழக்கத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்: கர்ப்பமானதும் கைவிட்டு போன கணவர்!

ஃபேஸ்புக் பழக்கத்தில் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் கர்ப்பமானதும் தனது கணவர் தன்னை விட்டு போனதால் தற்போது பெரும் சிக்கலில் உள்ளார்