'பாகுபலி 2' படத்தில் தமிழின விரோதி: பிரபல இசையமைப்பாளர் கருத்து

  • IndiaGlitz, [Wednesday,May 03 2017]

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்து வருகிறது. இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும், அனைத்து திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்கள்தான் கொடுத்துள்ளது. கமால் ஆர்.கான், தங்கர்பச்சான் போன்ற வெகுசிலரே இந்த படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 'பாகுபலியை அப்படி இப்படி விமர்சனம் செய்தால் அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன்' என்று சமுத்திரக்கனி டுவீட் செய்ததால் எதிர்மறை விமர்சனம் செய்ய நினைத்தவர்களும் அடங்கிவிட்டார்களா? என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்தில் தமிழ் பின்னணி பேசியவர்களின் உச்சரிப்பு குறித்த குறையை சுட்டிக்காட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
பாகுபலி அற்புதமான முயற்சி. அந்தக் கடுமையான உழைப்பையும், மெனக்கெடலையும் மனதார பாரட்டுகிறோம். சாதனைகளை முறியடிக்கிற வசூல் உங்கள் தரிசனத்துக்கு கிடைத்த வெகுமதி. உங்கள் வெற்றியில் நாங்களும் மகிழ்கிறோம்.
தமிழனாய் ஒரு சின்ன நெருடல். தமிழ் உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பிழையான சில இடங்களில் மனது நொந்தது. உங்கள் மேல் தவறில்லை. ஏனெனில், இது உங்கள் மொழியில்லை. தமிழுக்குப் பொறுப்பேற்றவர்கள் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். கதாபாத்திரங்களைப் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. சிலர் மனம் நோகும்.
ஹிந்தியிலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ இப்படித் தவறுகள் நிகழுமா? அதைப் பொறுத்துக் கொள்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்களோ இல்லையோ, நான் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? தவறான உச்சரிப்புகளை அடையாளம் காண இந்தத் தமிழ்நாட்டில் உங்களுக்கு ஒரு தமிழன் கிடைக்கவில்லையா? அல்லது, இங்கு இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களா? தமிழனுக்கு தமிழன்தான் விரோதி என்று சொல்வார்கள்; இப்பொழுது தமிழுக்கும் தமிழன்தான் விரோதி போலும்!
இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

More News

கேரள பூரம் திருவிழாவில் ஆஸ்கார் நாயகனின் புதிய முயற்சி

கேரள மாநிலத்தில் நடைபெறும் 'பூரம்' திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வரிசையாக நிற்கும் யானைகள், விதவிதமக ஒலிக்கப்படும் இசை, பட்டாசுகளின் வாண வேடிக்கை ஆகியவை இந்த திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்

ஜெயலலிதா செய்தது மிகபெரிய தவறு! நாஞ்சில் சம்பத்

தினகரன் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுகவில் தினகரன் அணியை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவது தெரிந்ததே.

ஜெயலலிதா சிகிச்சை படம் விரைவில் வெளியீடு: ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் அம்மா அதிமுக

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குறிப்பாக அவரது அறையில் இருந்த சிசிடிவி அகற்றப்பட்டது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் பல்வேறு கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்...

பிரபல தொலைக்காட்சி தொடரின் ஹீரோ தற்கொலை

கடந்த சில வருடங்களாக சின்னத்திரை கலைஞர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட தொலைக்காட்சி நடிகை மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

'பல்வாள்தேவன்' ராணாவுக்கு வலதுகண் பார்வை பறிபோனதா?

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சாதனை வசூல் பெற்று வரும் 'எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தில் பிரபாசுக்கு அடுத்தபடியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பல்வாள்தேவன் கேரக்டரில் நடித்த ராணாதான்....