close
Choose your channels

நெடுவாசலுக்காக ஒரு பாடல். பிரபல இசையமைப்பாளர் திட்டம்

Thursday, March 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்து முடிந்த இளைஞர்களின் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்தில் திரையுலகினர்கள் தந்த ஆதரவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டு போராட்டக்கார்களிடமும், மக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தினர்.

குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்காமராஜ் எழுதி இருவரும் இணைந்து பாடிய 'கொம்பு வச்ச சிங்கமடா' என்ற பாடலை கேட்ட ஒவ்வொருவரின் நாடி நரம்பும் முறுக்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கொழுந்துவிட்டு எரியும் 'நெடுவாசல்' பிரச்சனைக்காகவும் அருண்காமராஜ் அவர்களுடன் இணைந்து ஒரு பாடலை கம்போஸ் செய்யவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த பாடலும் ஜல்லிக்கட்டு பாடல் போல பொதுமக்களை நெடுவாசலுக்கு அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் 5ஆம் தேதி ஞாயிறு அன்று நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க ஜி.வி.பிரகாஷ் நெடுவாசலுக்கு நேரில் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.