ஷங்கர் படத்தில் நடித்தவர் இப்போது அவரது படத்திற்கு இசையமைப்பாளரா?

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்தவர் தற்போது அவரது படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஷங்கர் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார் என்பதும், ஓரிரு படங்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைக்கவில்லை என்றும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ராம் சரண் தேஜா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் என்பதால் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் தான் இசையமைப்பாளர் என படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் தமன், ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் நாயகன் சித்தார்த்தின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தமன் இப்போது அவரது படத்திற்கு இசையமைப்பாளராகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

More News

நீட் தேர்வு குறித்து பொது விவாதத்திற்கு தயாரா? சூர்யாவுக்கு பாஜக அழைப்பு!

நீட் தேர்வு குறித்து பொது வெளியில் பொது விவாதம் நடத்த நடிகர் சூர்யா தயாரா? என பாஜக பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாமி வந்தவரிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: வைரல் வீடியோ

https://tamil.news18.com/news/entertainment/cinema-ajith-fans-asks-valimai-update-to-priest-mur-496331.html

சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிக்பாஸ் நடிகை: வைரல் புகைப்படம்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று சைக்கிளிங் சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடன் நடிகையும் பிக்பாஸ்

டி20 போட்டியில் முதல் இரட்டை சதம்.. பேய் அடி பேட்டிங்கால் அலறவிட்ட இளம் வீரர்!

உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டியில் டெல்லி லெவன் அணியைச் சேர்ந்த இளம் வீரர் சுபோத் பாட்டி இரட்டை சதம் அடித்து உலகச் சாதனை படைத்து இருக்கிறார்.

கோவையில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்...! பலருக்கும் கண்போன பரிதாபம்.....!

கோவையில் கருப்பு பூஞ்சை தொற்றால் 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 30 நபர்கள் கண் பார்வையை இழந்துள்ளனர்.