இசையமைப்பாளர், தயாரிப்பாளரை அடுத்து யுவனின் அடுத்த அவதாரம்1

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும் இசைஞானி இளையராஜாவின் மகனுமான யுவன்சங்கர் ராஜா, தற்போது இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் ஆகிய துறையில் ஜொலித்து வரும் நிலையில் மேலும் ஒரு புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து நடந்த விழாவில் பேசிய யுவன்சங்கர்ராஜா ’ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் விரைவில் இயக்குனராக களம் இறங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் இயக்கும் முதல் படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ் திரையுலகில் கங்கை அமரன், விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள் இயக்குனர்களாகி உள்ளனர் என்பது தெரிந்ததே.

More News

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகிய கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா… சுவாமி தரிசனத்திற்கு பிறகான புகைப்படம்!

90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தற்போது ஆந்திரா

தமிழகத்திற்கு திடீர் மஞ்சள் அலர்ட்… கனமழைக்கு வாய்ப்பா?

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது

மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ளாவில் 26 வயது மகன் காலமானார்:

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெல்லா வின் மகன் ஜெயின் நாதெல்லா என்பவர் திடீரென காலமாகி

சமந்தா மடியில் இடம்பிடித்தது குறித்து நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்!

சமந்தா மடியில் இடம் பிடித்த செல்லப்பிராணிகள் குறித்து நெட்டிசன்கள் பதிவு செய்த சுவாரஸ்யமான கமெண்ட்ஸ்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.