திருப்பதி கோவிலுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி!

  • IndiaGlitz, [Wednesday,September 21 2022]

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கான தொகையை நன்கொடையாக அளித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய தம்பதி கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர் ஒரு கோடியே 2 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர். சென்னையை சேர்ந்த சுபினா பானு மற்றும் அப்துல் கனி என்ற தம்பதி சமீபத்தில் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டனர.

அதன் பின்னர் அங்குள்ள தேவஸ்தான அதிகாரியை சந்தித்து 1.02 கோடி ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார்கள். இதில் 15 லட்ச ரூபாய் தினசரி அன்னதான திட்டத்திற்கும் 87 லட்ச ரூபாய் பத்மாவதி விருந்தினர் மாளிகையை புதுப்பிக்கும் பணிக்கும் பயன்படுத்த அவர்கள் நிர்வாக அதிகாரியை கேட்டுக்கொண்டனர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு கோடிக்கு மேல் நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நெட்டிசன்கள் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இவர்களது நன்கொடை அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

டிக்டாக் ஜிபி முத்துவுடன் அதிவேக பைக் பயணம்: பிரபல யூடியூபர் மீது வழக்குப்பதிவு!

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை பின்னால் வைத்துக்கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டியதாக பிரபல யூடியூபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

லோகேஷ் யுனிவர்ஸில் இணைய விரும்புகிறேன்: ஒரே நாளில் 'கைதி' 'விக்ரம்' பார்த்த பிரபலம் அறிவிப்பு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருக்கு 'லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்' என்ற LCU பட்டத்தை ரசிகர்கள் வழங்கினார்கள்

'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்விக்கு யார் காரணம்? கெளதம் மேனன்

 தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்ததே.

எங்கே போனாள் தெரியவில்லை.. வாசலில் மட்டும் அவளின் காலணி: மகள் தூரிகை குறித்து கபிலன் எழுதிய கண்ணீர் கவிதை!

 பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரே ஒரு சார்ட் காண்பித்தார், மொத்த புக்கையும் படிச்ச மாதிரி ஆயிடுச்சு: பொன்னியின் செல்வன் குறித்து ஜெயராம்!

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.