மதம் கடந்த மனிதம்… இந்து கோவிலுக்கு நிலத்தை நன்கொடையாகக் கொடுத்த இஸ்லாமியர்!!!

  • IndiaGlitz, [Thursday,December 10 2020]

 

மதம் ஒருவேளை மனிதனைக் கட்டிப்போட்டாலும் மனிதம் எப்போதும் பரந்துபட்டதாகவே இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் பெங்களூரூ பகுதியைச் சேர்ந்த பாஷா. பெங்களூரின் ஹோஸ்கோட் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாஷா தன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியை தானாகவே முன்வந்து நன்கொடையாக வழங்கி உள்ளார். இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வலகரேபுரா எனும் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் பாஷாவிற்கு சொந்தமான நிலம் இருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் சாமியை தரிசனம் செய்வதை பார்த்த பாஷா தாமாக முன்வந்து கோவிலை புணரமைப்பதற்கு வேண்டிய நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி இருக்கிறார். இதனால் மகிழ்ந்த கோவில் நிர்வாகம் தற்போது அப்பகுதியில் புணரமைப்பு பணிகளைத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையல் பாஷா ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழங்கிய நிலத்தின் மதிப்பு சுமார் 80 லட்சத்தைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. 1.5 குண்டாஸ் அளவுள்ள நிலத்தை பாஷா தாமாக முன்வந்த இந்து கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அவருக்கு நேரில் சென்று நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா??? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!!

பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.

கொரோனா பாதிப்பால் 9 மாத சிகிச்சை… மீண்டுவந்த இளம் பெண்ணின் நெகிழ்ச்சி அனுபவம்!!!

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் பல்வேறு சிக்கலான சிகிச்சைக்குப் பின் உடல் நலம்பெற்று நேற்று வீடு திரும்பியுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் இணைவேன், ஆனால்... முக அழகிரியின் காமெடி பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வரும் 31-ஆம் தேதி வெளியிட உள்ளார் என்பதும் அவர் வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

என் மகளை அவர் தான் கொன்றுவிட்டான், அவரை நானே கொல்வேன்: சித்ரா தாய் ஆவேசம்

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும், உடல் பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டவுடன்

அப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற! நெட்டிசன்கள் பாராட்டு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அனிதா பேசியபோது, 'எல்லாரும் தனித்தனியா பேரை வச்சுட்டு, இப்ப அனிதா அந்த பேரயெல்லாம் சொல்லுவாங்கன்னு சொல்ரது