அன்னையர் தினத்தில் முதல்முறையாக 'அம்மா' என கூப்பிட்ட குழந்தை: பிக்பாஸ் நடிகர் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Sunday,May 10 2020]

ராதாமோகனின் ’அபியும் நானும்’ கமல்ஹாசனின் ’உன்னைப்போல் ஒருவன்’ போன்ற படங்களில் நடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அவருக்கும் தொலைக்காட்சி நடிகை நிஷா கிருஷ்ணனுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. இந்த தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும், அந்த குழந்தைக்கு சமைரா’ என்ற பெயரும் வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த அன்னையர் தினத்தில் தங்களது குழந்தை முதன்முதலாக ’அம்மா’ என அழைத்ததாக கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அன்னையர் தினம் மற்றும் ’அம்மா’ என அழைத்த குழந்தை ஆகிய இரண்டும் ஒரே ஒரே நாளில் வந்துள்ளது மிகவும் அழகான விஷயம் என்றும் தங்கள் மகள் சமைராவின் ‘அம்மா’ என்ற குரலை முதல் முறையாக கேட்டு இருவரும் பரவசம் அடைந்தோம் என்றும் கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

தனது குழந்தை ‘அம்மா’ என்று அழைத்த அந்த ஒரு நிமிடம் தனது தனக்கு தாய்மையின் உணர்வு புரிந்ததாகவும் கணேஷின் மனைவி நிஷா கிருஷ்ணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கணேஷ்-நிஷா தம்பதிகள் இன்று உண்மையான அன்னையர் தினத்தை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு பெண் மருத்துவர் உள்பட 5 மருத்துவர்களுக்கு கொரோனா: சென்னையில் பரபரப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

லாட்டரி, சூதாட்டம், கஞ்சா, பலான இடம், எல்லாத்தையும் திறந்துடுங்க: கஸ்தூரி ஆவேசம்

நடிகை கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் ஆவேசமாக தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்து

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை ஏற்று கொண்ட விஜய்: லாக்டவுன் முடிந்ததும் சந்திக்க விருப்பம்

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அவர்கள் மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் பாடலை மிக அருமையாக பாடியதாக செய்தி வெளியிட்டு இருந்தார்.

கடவுள் வெளியே இல்லை, அம்மாவிடம் தான் உள்ளார்: ராகவா லாரன்ஸின் அன்னையர் தின வாழ்த்து

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் டுவிட்டரில் இரண்டுக்கும் மேற்பட்ட அன்னையர் தின ஹேஷ்டேக்குகள் டிரண்டில் உள்ளன.

மீண்டும் முதலிடத்தை பிடித்த ராயபுரம்: கருஞ்சிவப்பு பகுதியாக அறிவிப்பு

சென்னையில் கடந்த சில வாரங்களாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கடந்த நான்கைந்து நாட்களாக ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவிக நகர் முதலிடத்தை பிடித்தது.