close
Choose your channels

நான் போட்ட தப்புக்கணக்கு: முதல்முறையாக மனம் விட்டு பேசிய நாக சைதன்யா!

Sunday, July 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தாவின் முன்னாள் கணவரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகசைதன்யா ஒரு விஷயத்தில் நான் தப்புக்கணக்கு போட்டு விட்டேன் என்று பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகசைதன்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’தேங்க் யூ’ என்ற திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் வசூல் அளவில் படுதோல்வி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்தின் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் நாகசைதன்யா கூறும் போது, ‘ சில சமயங்களில் கதை விஷயத்தில் நாங்கள் தப்புக்கணக்கு போட்டு விடுகிறோம். ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். ஆனால் சில இடங்களில் நாங்கள் கோட்டை விட்டு விடுகிறோம்.

இந்த நிலையில் எந்த இடத்தில் தப்பு செய்தோம்? எந்த இடத்தில் சரியாக செய்திருக்கலாம்? என்பது குறித்து பாடம் கற்றுக் கொண்டு வருகிறோம். ஒரு வெற்றி சில விஷயங்களை மட்டும் தான் கற்றுக் கொடுக்கும், ஆனால் ஒரு தோல்வி பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும்’ என்று கூறியுள்ளார்.

நாக சைதன்யா நடித்த ’தேங்க் யூ’ படத்தை விஜய்யின் ’வாரிசு’ படத்தை தயாரித்து வரும் ‘தில் ராஜூ’ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.