அந்த பிரபல தமிழ் இயக்குனர் என்னுடன் கல்லூரியில் படித்தவர்: அண்ணாமலை கூறிய ஆச்சரிய தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் என்னுடன் கல்லூரியில் படித்தவர் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய போது தெரிவித்தார். அவர் கூறிய அந்த பிரபல இயக்குனர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அண்ணாமலை மேலும் கூறிய போது, "கல்லூரியில் படிக்கும் போது எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் தான் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. அவர் கல்லூரியில் படிக்கும் போது எப்படி இருந்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும். நாங்கள் இருவரும் ஒரு நாடக குழுவில் சேர்ந்தோம். நான் இன்ஜினியரிங் படித்தேன், அவர் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தார்.
தேர்வு அறையில் எல்லோரும் விடைத்தாளை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தேசிங்கு பெரியசாமி மட்டும் புரட்டவே மாட்டார். ஏனெனில் அவர் எப்போதுமே கடைசி மதிப்பெண் தான் இருப்பார். கல்லூரியில் படிக்கும் போதே அவருக்கு படிப்பை விட சினிமா மீதுதான் அதிக ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தால் தான் அவர் படம் எடுத்தார். இன்று வெற்றி இயக்குனராக உள்ளார்.
இதை எதற்காக சொல்கிறேன் என்றால், 20 முதல் 25 வருடங்கள் நிறைய முயற்சி செய்து, ஒரு சோதனையை, காலத்தை தாண்டி தான் நாம் எல்லோருமே ஒரு வெற்றியை பெறுகிறோம்.
30 வயதில் நீங்கள் ஒரு தோல்வியை சந்தித்து இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. தோல்வி தான் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தரும்’ என்று அண்ணாமலை பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments