close
Choose your channels

கன்னடர்கள்தான் கர்நாடகாவை ஆளவேண்டும் என்று கூறினாரா பிரகாஷ்ராஜ்?

Tuesday, January 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆளவேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தது. இதனால் பிரகாஷ்ராஜூக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தல்களில் தோற்கடிப்போம் என்றுதான் பெங்களூரு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாக பிரகாஷ்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

மேலும் தன்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து தனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்து இருக்கீன்றீர்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த விளக்கத்திற்கும் சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.