close
Choose your channels

எனது மனைவியின் கள்ளத்தொடர்பு ஆசாமி எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்: பிரபல நடிகர்

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி எங்கள் வீட்டில்தான் இருக்கிறார் என்றும் பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் கரண் மெஹ்ராவுக்கும் நடிகை நிஷாவுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றனர் என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் தன்னை அடித்து தாக்கிவிட்டு ஒரு கோடி ரூபாய் எடுத்துச் சென்று விட்டதாக நிஷா காவல்துறையில் புகார் அளித்தார் என்பது தெரிந்ததே.

இந்த புகாரின் அடிப்படையில் கரண் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின் அவருடைய உறவினர்கள் முயற்சியால் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கரண் மெஹ்ரா கூறியபோது ’எனது மனைவி நிஷாவுக்கும், இன்னொருவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது என்றும் இதனை அந்த நபரே ஒப்புக் கொண்டார் என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கள்ளத்தொடர்பு ஆசாமி இன்னும் எங்கள் வீட்டில்தான் வசித்து வருகிறார் என்றும் கடந்த பல மாதங்களாக அவர் எங்கள் வீட்டில்தான் தங்கி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். கரண் மெஹ்ராவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.