close
Choose your channels

மிஷ்கின் - அருண்விஜய் இணையும் படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

Wednesday, June 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மிஷ்கின், விஷால் நடித்த ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அவருக்கும் விஷாலுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ’துப்பறிவாளன் 2’ படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது அந்த படத்தை விஷாலே இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிஷ்கினின் அடுத்த படத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது ஒரு ஆச்சரியமான செய்தியாக மிஷ்கினின் சூப்பர் ஹிட் படமான ’அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

2008ஆம் ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நரேன் நடிப்பில் வெளியான ’அஞ்சாதே’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அருண்விஜய் போலீசாக நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்திற்கு ‘காவு’ என்ற டைட்டில் வைக்க பரிசீலனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மிஷ்கின் இந்த லாக்டவுன் விடுமுறையில் 11 திரைக்கதைகளை தயார் செய்து வைத்து இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக அவர் திரைப்படம் எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் ஒன்று சிம்புவுக்காக எழுதப்பட்ட கதை என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.