நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த பட தகவலை அறிவிக்கும் பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Friday,September 18 2020]

கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் விஷாலின் ’துப்பரிவாளன் 2’ என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார். இதனை அடுத்து விஷாலே இந்த படத்தின் மீதி பகுதியை இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. குறிப்பாக சிம்பு நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை செப்டம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அறிவிக்க உள்ளதாக மிஷ்கின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் என்ன? ஹீரோ யார்? என்பது குறித்த தகவல்களை இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபல இயக்குனரால் கிராமத்துக்கு திரும்பும் சிம்பு!

சிம்பு நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் நகரத்து கதையம்சம் கொண்ட படங்களாகவே இருந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு ஹரி இயக்கிய 'கோவில்' என்ற திரைப்படம் முழுக்க முழுக்க

சென்னை கல்லூரி மாணவி திடீர் தற்கொலை: செல்போன் காரணமா?

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் அதிகநேரம் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை

'எவனென்று நினைத்தாய்' டைட்டில் இல்லை: உண்மையான டைட்டில் இதுதான்!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது

80, 90களின் பிரபல நடிகருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 80ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராமராஜன். 'கரகாட்டகாரன்' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில்

இருவருக்குமே இரண்டு வேடங்களா? விஜய்சேதுபதி-டாப்ஸி படம் குறித்த ஆச்சரிய தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை டாப்சி ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும்