close
Choose your channels

பலரையும் குடிகாரனாக மாத்தியது இளையராஜா தான்: மிஷ்கின் சர்ச்சை பேச்சு..!

Sunday, January 19, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மிஷ்கின் நேற்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசும்போது, சில சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தது நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடித்த ‘பாட்டில் ராதா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசும் போது, மது அருந்துவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பகிர்ந்தார். “மது அருந்துவது என்பது மன வருத்தம் அதிகம் உள்ளவர்கள் செய்யும் ஒன்று. அதற்கு பிறகு அவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள். ஆனால், எனக்கு மதுவை விட பெரிய போதை சினிமா தான். அதைவிட ஒரு பெருமைக்குரிய போதை இளையராஜா. அவர் தான் பலரையும் குடிகாரனாக மாற்றியவர் என்று சொல்லலாம்,” என்று அவர் கூறினார்.

மேலும், அவரது பேச்சின் போது சில தகாத வார்த்தைகளையும் உச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர்கள் வெற்றிமாறன், லிங்குசாமி உள்ளிட்டோர் மத்தியில் மிஷ்கின் கூறிய கருத்துகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment