ஸ்டிராங் ரூம் உண்மையிலேயே ஸ்டிராங் ரூமாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன் 

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் அன்றைய தினம் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் அருகே மர்மமான கண்டெய்னர்கள் இருப்பதாகவும் இயந்திரங்களை ஹேக் செய்ய லேப்டாப்புடன் சிலர் நடமாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

இது குறித்து கமல்ஹாசன் கூறுகையில் வாக்கு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் ஸ்ட்ராங் ரூம் உண்மையிலேயே ஸ்ட்ராங் ரூம் ஆக இருக்க வேண்டும் என்றும், அதன் அருகே மர்மமான முறையில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுகிறது என்பதும் லேப்டாப்புடன் மர்ம நபர்கள் சிலர் நடமாட்டம் உள்ளது என கூறப்படுவது பெரும் கவலையை அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென கண்டெய்னர் லாரிகள் வருவது ஏன் என்ற கேள்வியும் கமலஹாசன் எழுப்பியுள்ளார். கமல்ஹாசனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் புதிய கோரிக்கை: திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்

புதிய ஆட்சி அமைந்தவுடன் திரையரங்குகளுக்கான புதிய கோரிக்கைகள் கேட்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார் 

மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…பொதுத் தேர்வு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனின் வாயிலாகவே நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்?

முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் கால்பதித்து இருக்கும் இளம் வீரர் ஒருவரை ரசிகர்கள் அனைவரும் தல

போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கிய மியான்மர் ராணுவம்...!வெளியான புகைப்படம்....!

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதால், போராட்டக்காரர்களை அவர்கள் கடுமையாக தாக்கி வருகிறார்கள். 

ஜான்வி கபூரின் ஹாட் முத்தம்: இன்ஸ்டாவில் அவரே பதிவு செய்த புகைப்படங்கள்!

இந்திய லேடி சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், 'தடக்' பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னரும் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது