ஒய் பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டில் செருப்பு வீச்சு.. மர்ம நபர் யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசியதாக வெளிவந்த தகவல், அந்த கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில், கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் இன்று மர்ம நபர் ஒருவர் திடீரென செருப்பை வீசியதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம நபர், ஒரு குழந்தையின் செருப்பை செல்போனில் பேசுவது போல் சைகை காட்டிய பின்னர், திடீரென விஜய் வீட்டிற்குள் வீசியுள்ளார்.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை வெளியேற்றி உள்ளனர். மேலும், அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, மத்திய அரசு விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ள நிலையில், அதையும் மீறி ஒரு மர்ம நபர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments