'சென்னையில் ஓர் நாள்' படம் போல் ஒரு நிஜ சம்பவம்

  • IndiaGlitz, [Sunday,September 09 2018]

'சென்னையில் ஓர் நாள்' படத்தில் சிக்னல்கள் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிட்டது போல் கோவையில் நேற்று ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளது.

கோவையை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஜெயபிரகாஷ் என்பவரின் ஒருவயது குழந்தை விசைத்தறி இயங்கி கொண்டிருக்கும்போது திடீரென அதில் கையை வைத்துவிட்டது. இதனால் குழந்தையின் நான்கு விரல்கள் துண்டாகியது.

இதனை தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் ஆம்புலன்ஸை வரவழைத்தார். ஆனால் அந்த நேரத்தில் டிராபிக் அதிகமாக இருந்ததால் குறித்த நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்ல முடியுமா? என்ற நிலை இருந்தது. இந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் உடனடியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினார். இது ஒரு குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை புரிந்து கொண்ட கமிஷனர் உடனடியாக அவிநாசி சாலையிலுள்ள சிட்ரா முதல் சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை வரை சாலையெங்கிலும் உள்ள 12 சிக்னல்களையும், ஒரே நேரத்தில் ரெட் சிக்னல் போட்டு போக்குவரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

இதனால் ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது. மேலும் துண்டுபட்ட விரல்களை ஐஸ்பெட்டியில் பாதுகாத்து கொண்டு செல்லப்பட்டதால் குழந்தைக்கு சரியான சிகிச்சையும் கிடைத்தது. இக்கட்டான நேரத்திலும் பதட்டமடையாமல் புத்திசாலித்தனமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவருக்கும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய போலீஸ் கமிஷனருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

டாஸ்மாக் கடையை திறக்க பெண்கள் போராட்டம்: தமிழகத்தில் ஒரு விசித்திரம்

கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உண்மையில் ஐஸ்வர்யாவை மக்கள் தான் காப்பாற்றினார்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் பட்டியலில் இருந்த ஐஸ்வர்யா, மும்தாஜ், செண்ட்ராயன், விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக

நயன்தாரா மகளாக நடித்த பிரபல காமெடி நடிகரின் மகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.

பிக்பாஸ் எவிக்சனில் எதிர்பாராத திருப்பம்: வெளியேறியது யார் தெரியுமா?

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் மும்தாஜ், செண்ட்ராயன், ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாமர்த்தியமாக வாக்கு சேகரிக்கும் கமல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.