ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்த ஆனந்த யாழ்'. முத்துகுமாருக்கு புகழாரம்

  • IndiaGlitz, [Sunday,April 02 2017]

மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் அவர்கள் எழுதிய 'ஆனந்த யாழ்' என்ற பாடல் ஒவ்வொரு தந்தையின் மனதிலும் ஊடுருவி ஒரு இன்ப அனுபவத்தை கொடுத்தது என்பதை அனைவரும் அறிவர். இந்த ஒரே ஒரு பாடல் மட்டும் தயாரிப்பாளருக்கு ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

நா.முத்துகுமார் பாடல்கள் எழுதிய படமான 'யாகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் நா.முத்துகுமாரின் மகன் கலந்து கொண்டார். இந்த படத்தின் பாடல்கள் எழுதியதற்காக நா.முத்துகுமாருக்கு சேரவேண்டிய 25 ஆயிரம் ரூபாயை நா.முத்துகுமாரின் மகனிடம் படக்குழுவினர் அளித்தனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட 'தங்க மீன்கள்' தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் பேசியபோது, 'இந்த படத்திற்கு பாடல் எழுதியிருப்பவர் என் நண்பர் நா.முத்துகுமார். இரண்டு தேசிய விருதுகள் வாங்கும்போது என் அருகில் அவர் இருந்தார். முத்துகுமார் ஒரு ஞானி என்று தான் நினைக்கிறேன். அவரின் குடும்பம் நல்ல நிலைக்கு வர ஆண்டவனை வேண்டுகிறேன்.

தங்கமீன்கள் படத்தில் அவரின் 'ஆனந்த யாழை... பாடல் மறக்க முடியாதது. என்னை வியாபாரத்தில் சிந்திக்க வைத்த பாடல். தங்கமீன்கள் பாட்டை மொத்தமாக ஒரு ஆடியோ நிறுவனத்திற்கு கொடுத்திருந்தோம். அதில் இந்த ஒரு பாட்டு மூலம் மட்டும் ரூ.1.25 கோடி கிடைத்தது. அடுத்தது ரம்மி என்ற பாடல் மூலம் 75 லட்சம் கிடைத்தது என்று தனது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தார் சதீஷ்..

More News

'தளபதி 61' டைட்டில்: ஆறில் ஒன்றுதான் 'மூன்றுமுகம்'. படக்குழுவினர் விளக்கம்.

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' என கடந்த சில மணி நேரங்களாக சமூக இணையதளங்களில் ஒரு போஸ்டர் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே 'தளபதி 61' படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டதாக கூறப்பட்டது...

மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் பட டைட்டில்?

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும்  படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட

கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு சத்யராஜ் செய்த மகத்தான உதவி

சமீபத்தில் கோவை பகுதியில் பரூக் என்ற கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். திராவிட கழகத்தை சேர்ந்த பரூக், இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்து பரூக்கை கொலை செய்ததாக அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்...

காதல் மன்னன் கேரக்டரை மிஸ் செய்த சூர்யா

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கேரக்டரில் பிரபல நடிகர் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். வெற்றி பெறுவது யார்?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியுள்ளது.